×

பூந்தமல்லி பகுதியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: எம்எல்ஏக்கள் பங்கேற்பு

திருவள்ளூர்: பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பொதுக்குழு உறுப்பினர் முத்தமிழ்ச்செல்வன் ஏற்பாட்டில் பாரிவாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றியச் செயலாளர் கமலேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் ஜனார்த்தனன், புகழேந்தி, வயலை பிரபாகரன், பிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் தணிகாசலம், பரிமேலழகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் மாவட்டச் செயலாளர் ஆவடி சாமு.நாசர் எம்எல்ஏ, மாநில ஆதிதிராவிட நல அணிச் செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு மோர், இளநீர், ரோஸ் மில்க், பழரசம், எலுமிச்சை ஜூஸ், தர்பூசணி, கிர்ணி பழம், வெள்ளரி மற்றும் குளிர்பானங்களை வழங்கினர். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ரமேஷ், மாவட்ட துணைச் செயலாளர் ஜெயபாலன், பொதுக்குழு உறுப்பினர் விமல்வர்ஷன், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் திருமலைராஜ், குமரேசன், திருலோகசுந்தர், ராம்பாபு, சாய்மோகன், ஸ்டாலின், சுமதி, கிளைச் செயலாளர்கள் புருஷோத்தமன், சுதாகர், குமார், வார்டு உறுப்பினர்கள் ஹரி, குகராமன் உள்பட பலர் கலர் கலந்து கொண்டனர்.

திருவேற்காடு : பூந்தமல்லி நகர திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி குமணன்சாவடியில் நகர செயலாளர் திருமலை தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு‌.நாசர் எம்எல்ஏ, பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்துகொண்டு, தண்ணீர் பந்தலை திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் காயத்ரி ஸ்ரீதர், ரமேஷ், பூந்தமல்லி நகர் மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணை தலைவர் ஸ்ரீதர், மாவட்ட பிரதிநிதி லயன் சுதாகர், நகர அவைத்தலைவர் தாஜூதீன், நகர நிர்வாகிகள் துரை பாஸ்கர், அப்பர் ஸ்டாலின், டெல்லி ராணி மலர்மண்ணன், நகர பொருளாளர் அசோக்குமார், மாவட்ட பிரதிநிதிகள் லயன் சுதாகர், புண்ணியகோட்டி, அன்பழகன் சௌந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல, ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவேற்காட்டில் நகர திமுக சார்பில், பேருந்து நிலையம் அருகே தண்ணீர் பந்தல் நேற்று திறந்து வைக்கப்பட்டது. திருவேற்காடு நகர செயலாளர் நகர் மன்ற தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். ஆவடி எம்எல்ஏ சா.மு.நாசர் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நகர திமுக அவைத்தலைவர் பென்னி, நகர துணை செயலாளர் குமாரசாமி, நகர திமுக நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள் காந்தி, பரிசமுத்து, இளங்கோவன், உமாபதி, சரவணன், சத்யகிரி, கே.பி.சுதாகர், இளையராஜா, சாந்தி ராஜா, ராஜூ, சாது, பன்னீர்செல்வம், மனோகர், ஜெகன், நடராஜ், நரேஷ், நாராயணன், திமுகவினர், மகளிர் அணியினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

திருத்தணி : திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் திருத்தணி கமலா திரையரங்கம் பகுதியில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருத்தணி ம.கிரண் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.சந்திரன் எம்எல்ஏ, மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக் ஆகியோர் பங்கேற்று நீர் மோர் பந்தல் திறந்துவைத்து பொதுமக்களுக்கு பழங்கள், மோர், தயிர் சாதம் வழங்கினர். திருத்தணி தொகுதி பார்வையாளர் மனோகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சுகுமாரன், மோதிலால், பாபு, புவனேஷ் குமார், திலீபன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

The post பூந்தமல்லி பகுதியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: எம்எல்ஏக்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : water pandal ,DMK ,Poontamalli ,Thiruvallur ,Poontamalli East Union DMK ,Muthamilchelvan ,Parivakam ,Union Secretary ,Kamlesh ,Janardhanan ,Pugahendi ,Vayalai Prabhakaran ,Prakash ,Panchayat ,pandal ,Dinakaran ,
× RELATED தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில்...